அறிமுகம் – 300 எளிய குறள்கள்
திருக்குறள் படித்தல் (ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்) அனைவருக்கும், வணக்கம். ஒவ்வொரு திருக்குறளிலும் மிகக் குறைந்த சொற்களே (6-10) உள்ளன. அவை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த சொற்களே. திருக்குறள் எழுதப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு மேலானதால் சொற்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் திரிந்து வேறுபட்டு, இப்பொழுது உரை எழுதிப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் “குறள்வெண்பா” வகையில் எழுதப் பட்டுள்ளது. எனவே பாக்கள் அனைத்தும் 7 சீர்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. சீர் அமைப்பிற்கு …